உள்ளூர் செய்திகள்
கீரம்பூர் அருகே தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் திருப்பணிக்கான பூமிபூஜை
- கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள சாய் தபோவனத்தில் புதிதாக சாய்பாபாவிற்கு சாவடி எழுப்பும் திருப்பணி தொடங்க உள்ளனர்.
- இதற்கான பூமி பூஜை விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், சங்கல்ப பூஜை மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள தொட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள சாய் தபோவனத்தில் புதிதாக சாய்பாபாவிற்கு சாவடி எழுப்பும் திருப்பணி தொடங்க உள்ளனர். இதற்கான பூமி பூஜை விழாவை முன்னிட்டு காலை கணபதி ஹோமம், சங்கல்ப பூஜை மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
விழாவில் கரூர் சின்மயா மிஷன் தலைவர் அனுத்தமாநந்தா சுவாமிகள் சாவடி பூமி பூஜையை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து சாய்பாபாவிற்கு சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பூமிபூஜையில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாய்பாபாவை தரிசனம் செய்தனர்.