உள்ளூர் செய்திகள் (District)
- தருமபுரி வந்தபோது குண்டலப்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளார்.
- இரவு வண்டியை வெளியே நிறுத்திவிட்டு அறையில் தங்கி, மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
தருமபுரி,
கர்நாடகா மாநிலம், ஓங்கந்திரா பகுதியைச் சேர்ந்தவர் நவீன் குமார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
இவர் தனது நண்பரின் திருமணத்திற்காக இரு சக்கர வாகனத்தில் தருமபுரி வந்தபோது குண்டலப்பட்டியில் உள்ள தனியார் லாட்ஜில் தங்கி உள்ளார்.
இரவு வண்டியை வெளியே நிறுத்திவிட்டு அறையில் தங்கி, மறுநாள் காலை பார்த்த போது இரு சக்கர வாகனத்தை காணவில்லை.
இது குறித்து மதிகோண்பாளையம் போலீசில் ஸ்டேசனில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.