உள்ளூர் செய்திகள் (District)

வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி-2 பேர் கைது

Published On 2023-04-24 10:02 GMT   |   Update On 2023-04-24 10:02 GMT
  • நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை உடைப்பது சத்தம் கேட்டு வெளியே பார்த்தார்.
  • போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் பகுதியைச் சேர்ந்தவர் முரளி (வயது31). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார்.

இவர் நேற்று வழக்கம் போல் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து உள்பக்கமாக பூட்டிவிட்டு தூங்க சென்றார்.

அப்போது நள்ளிரவில் யாரோ வீட்டின் கதவை உடைப்பது சத்தம் கேட்டு வெளியே பார்த்தார். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் கதவின் உள்பக்கமாக பூட்டப்பட்ட பூட்டை உடைத்து உள்ள வந்தனர். உடனே முரளி திருடன், திருடன் என்று சத்தம்போட்டார். அப்போது மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

முரளியின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்கள் 2பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதுகுறித்து பாகலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் பிடிப்பட்டவர்கள் பாகலூரைச் சேர்ந்த மாரிமுத்து (22), பெலத்தூர் சிகாமணி (22) என்பதும், 2பேரும் சேர்ந்து முரளியின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர் என்பதும் தெரியவந்தது.

இதைத்ெதாடர்ந்து போலீசார் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

பாகலூரில் நள்ளிரவில் நடந்த இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News