உள்ளூர் செய்திகள் (District)

தனியார் பஸ்சில் பெண்ணிடம் ரூ.23 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு திருட்டுமர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு

Published On 2023-04-03 08:54 GMT   |   Update On 2023-04-03 08:54 GMT
  • தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
  • தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் வெள்ளை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வி (வயது32). இவர் கேன்சர் நோய்க்காக, புதுவை ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மார்ச் 31-ந்தேதி, தனது தந்தை சிங்காரவேலு உதவியுடன், புதுச்சேரி சென்று சிகிச்சை பெற்று இரவு காரைக்காலுக்கு பஸ்சில் திரும்பினார். புதுச்சேரியிலிருந்து நேரடி பஸ் கிடைக்காததால், சிதம்பரம் வந்து அங்கிருந்து காரைக்காலுக்கு தனியார் பஸ்ஸில் வந்தார். தாமரைச்செல்வி தனது கைப்பையில் சிறிய அளவிலான மணி பர்சில் ரூ.23 ஆயிரம் பணம், ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட பொருட்களை வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

பஸ்சில் அவர் அருகில், 4 ஆண்கள் அமர்ந்து, பேச்சு கொடுத்தவாறு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அதிகாலை காரைக்காலுக்கு பஸ் வந்த போது. கைப்பையை இருந்த மணி பர்சை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பஸ்சில் பல இடத்தில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து காரைக்கால் நகர போலீஸ் நிலையத்தில் தாமரைச்செல்வி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, பணம் மற்றும் ஏ.டி.எம். கார்டை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News