உள்ளூர் செய்திகள் (District)

கஞ்சா விற்றவர் கைது

Published On 2023-05-02 07:56 GMT   |   Update On 2023-05-02 07:56 GMT
  • போலீசார் பெட்டமுகிலாளம் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  • அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

தேன்கனிக் கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை போலீசார் பெட்டமுகிலாளம் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்த போது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. விசாரணையில் அவரது பெயர் மல்லேசா (27), பெட்டமுகிலாளம் அருகே உள்ள கோட்டையூர்கொல்லை என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News