உள்ளூர் செய்திகள்

காரில் தீவிபத்து

Published On 2023-03-28 10:13 GMT   |   Update On 2023-03-28 10:13 GMT
  • கெரகோட அள்ளி அருகே வந்த போது திடீரென காரில் தீ பற்றி எரிந்தது.
  • இதனை அறிந்ததும் காரில் பயணம் செய்தவர்கள் உடனே காரை நிறுத்தி இறங்கியுள்ளனர்.

தருமபுரி,

தேனியில் இருந்து பெங்களூரை நோக்கி கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டி ருந்தது. தருமபுரி மாவட்டம், கெரகோட அள்ளி அருகே வந்த போது திடீரென காரில் தீ பற்றி எரிந்தது.

இதனை அறிந்ததும் காரில் பயணம் செய்தவர்கள் உடனே காரை நிறுத்தி இறங்கியுள்ளனர்.

இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News