உள்ளூர் செய்திகள் (District)

மாநாட்டு திடல் பகுதியில் நிரம்பி வழிந்த கார்-வேன்கள்: பஞ்சர் ஒட்ட தயார் நிலையில் மெக்கானிக்குகள்

Published On 2024-10-27 09:30 GMT   |   Update On 2024-10-27 09:30 GMT

த.வெ.க. மாநாட்டுக்கு வந்திருப்பவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்துவதற் காக 4 இடங்களில் பார்க் கிங் வசதி செய்யப்பட்டு இருந்தது.

மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ள கீரைக் கொண்டை என்ற இடத்தில் 120 ஏக்கர் நிலப்பரப்பில் வாகனங்களை நிறுத்த பெரிய பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது.

இது தவிர 80 ஏக்கரில் ஒரு இடம், 37 ஏக்கரில் ஒரு இடம், 40 ஏக்கரில் இன்னொரு இடம் என மொத் தம் 4 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வாகன நிறுத்தும் இடங்கள் அனைத்தும் கார், வேன்கள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களில் டயர் பஞ்சரானால் அதனை சரி செய்வதற்காக மெக்கானிக்குகளும் பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

Tags:    

Similar News