உள்ளூர் செய்திகள் (District)

போலி பத்திர பதிவு செய்த 3 பேர் மீது வழக்கு

Published On 2023-04-05 10:00 GMT   |   Update On 2023-04-05 10:00 GMT
  • அரூர் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலத்துக்காக ஆசைப்பட்டு கேசவராஜ் மனைவியின் நிலத்தை தன்னுடைய பேரில் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
  • போலீசார் மணிமேகலை, ராஜம்மாள், கேசவராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோபிசெட்டி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கேசவராஜ். இவரது மனைவி ராஜம்மாள் (வயது65). இவருக்கு சொந்தமாக 2 ஏக்கர் 57 சென்ட் விவசாய நிலம் உள்ளது.

அதே போல் அதே பகுதியை சேர்ந்தவர் குடியரசு. இவரு டைய மனைவி பெயரும் ராஜம்மாள் (63). இருவருடைய பெயரும் ஒரே மாதிரி இருக்கிறது.

இதனால் குடியரசு மனைவி ராஜம்மாள் என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அரூர் பத்திர பதிவு அலுவலகத்தில் நிலத்துக்காக ஆசைப்பட்டு கேசவராஜ் மனைவியின் நிலத்தை தன்னுடைய பேரில் பதிவு செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கேசவராஜ் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து அரூர் போலீசார் மணிமேகலை, ராஜம்மாள், கேசவராஜ் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News