குட்கா விற்பனை செய்த 24 பேர் மீது வழக்கு
- போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- எஸ்.பி அதிரடி நடவடிக்கை
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக வந்த ரகசிய தகவலை அடைத்து மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், உத்தரவின் பேரில் தருமபுரி, அரூர், பென்னா கரம், பாலக்கோடு, உள்ளிட்ட காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட னர்.
அப்போது தருமபுரி சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் அரூர் சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் 9 கடைகளிலும் பென்னாகரம் சரக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் 5 கடைகளிலும் பாலகோடு சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 5 கடைகளிலும் அதிரடி சோதனை நடத்தினர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவது தெரிய வந்தது இதனையடுத்து அவைகளை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்டத்தில் குட்கா ஹான்ஸ் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக ஒரே நாளில் 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.