உள்ளூர் செய்திகள் (District)

பூத்துக்குலுங்கும் செண்டிப்பூக்கள்.

வேதாரண்யம் பகுதிகளில் பூத்துக்குலுங்கும் செண்டிப்பூக்கள்

Published On 2022-10-26 08:15 GMT   |   Update On 2022-10-26 10:26 GMT
  • 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிப்பூ சாகுபடி.
  • ஒரு கிலோ விலை கிலோ ரூ. 120 முதல் ரூ. 150வரை விற்பனையாகிறது.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், மருதூர் பஞ்சநதிக்குளம் நெய்விளக்கு குரவப்புலம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கரில் செண்டிபூ சாகுபடி நடைபெறுகிறது.

நாள் தோறும் இங்கு விலையும் செண்டி பூக்கள் கும்பகோணம், தஞ்சாவூர், காரைக்கால், மயிலாடுதுறை, மற்றும் உள்ளூர் பூ வியாபரிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

இத்தொழிலில் ஏரளமான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கமாக இங்கு விளையும் சென்டி பூ ஒரு கிலோ 20 முதல் 40 வரை விற்பனையாகும் நேற்று தீபாவளியை முன்னிட்டு சென்டிபூக்களின் ஒரு கிலோ விலை கிலோ ரூபாய் 120 முதல் முதல் 150வரை விற்பனையாகிறது.

நேற்று தீபாவளி பண்டிகை முன்னிட்டு செண்டி பூ விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News