சிலம்ப போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சான்றிதழ்
- தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
கும்பகோணம்:
குடந்தை வீரத்தமிழச்சி சிலம்பம் பள்ளி சார்பில் கும்பகோணம் பட்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், நோபல் உலக சாதனை படைத்த மாணவர்களுக்கும் மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார்.
நிகழ்ச்சியில், கும்பகோ ணம் மாநகராட்சி மேயர் க.சரவணன், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய துணைப் பெருந்தலைவரும், கும்பகோணம் மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர், கும்பகோணம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், ரோட்டரி அப்துல் கபூர், மருத்துவர் ஆனந்த், தொழிலதிபர் வின்வேலோகசந்திர பிரபு, பள்ளி தாளாளர் புனிததேவி, பயிற்சி ஆசிரியர் லெ.ராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.