உள்ளூர் செய்திகள் (District)

அட்சயலிங்க சாமி கோவிலில் தேரோட்டம் நடந்தது.

கீழ்வேளூர் அட்சயலிங்க சாமி கோவிலில் தேரோட்டம்

Published On 2023-04-12 09:30 GMT   |   Update On 2023-04-12 09:30 GMT
  • தேர் ராஜ வீதிகள் வழியாக வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது.
  • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரில் சுந்தரகுசாம்பிகை உடனுறை அட்சயலிங்க சுவாமி, அஞ்சுவட்டத்தம்மன் கோவில் அமைந்துள்ளது.இவ்வாலயத்தில் பங்குனி பெருவிழா கடந்த 4-ம்தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கி சுவாமி வீதிஉலா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.

முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அஞ்சுவட்டத்தம்மன்அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.

தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது.

இதையடுத்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேர் கோயிலை சுற்றியுள்ள 4 முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது.

மேளதாளங்கள் முழங்க சிலம்பாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

பேர் சொல்லும் சாலைகளில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News