உள்ளூர் செய்திகள் (District)
இலஞ்சியில் பட்டய பொறியாளர்கள் சங்க பொதுக்கூட்டம்
- மாநில துணை பொதுச்செயலாளர் பொறியாளர் குமார் வரவேற்று பேசினார்.
- இதில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தென்காசி:
தமிழ்நாடு பட்டய பொறியாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இலஞ்சியில் மாநில தலைவர் விஜயமுருகன் தலைமையில் நடந்தது.
மாநில துணை பொது செயலாளர் பொறியாளர் குமார் வரவேற்று பேசினார். மாநில பொதுச் செயலாளர் அழகப்பன், மாநில துணைத்தலைவர் லோகநாதன், தலைமை நிலை செயலாளர் மோகனசுந்தரம், மாநில அமைப்பு செயலாளர் சுந்தரலிங்கம், தேர்தல் ஆணையாளர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் மாநில தலைவர் சௌந்தரராஜன் விழா பேரூரை வழங்கினார். இதில் 28 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.