உள்ளூர் செய்திகள்
மூன்று சக்கரத்தாழ்வார்களும் ஒருசேர சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தஞ்சை ராஜகோபாலசாமி கோவிலில் சித்திரை நட்சத்திர சிறப்பு வழிபாடு
- மூன்று சக்கரத்தாழ்வார்களுக்கும் சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் வடக்கு வீதியில் ராஜகோபால சுவாமி கோயில் உள்ளது.
தஞ்சை பகுதியில் சக்கரத்தாழ்வா ருக்கு என உள்ள தனிக் கோவில் இதுவாகும். ஒன்பது தீபமேற்றி ஒன்பது முறை வலம் வந்து வழிபட்டால் எப்பேற்பட்ட பிரார்த்தனைகளையும் பெருமாள் நிறைவேற்றி தருவது என்பது ஐதீகம்.
இந்த கோயிலில் பங்குனி மாத சித்திரை நட்சத்திரத்தை முன்னிட்டு மூன்று சக்கரத்தாழ்வார்களுக்கும் சிறப்பு பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது.
மூன்று சக்கரத்தாழ்வார்கள் ஒருசேர சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.