உள்ளூர் செய்திகள் (District)

நீலகிரியில் தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் மீட்பு குழுக்கள் கலெக்டர் அம்ரித் தகவல்

Published On 2023-05-08 10:03 GMT   |   Update On 2023-05-08 10:03 GMT
  • பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் நவம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழையும், ஏப்ரல், மே மாதங்களில் கோடை மழையும் பெய்யும்.

நீலகிரி மாவட்டத்தை பொருத்தவரை அதிகபட்சமாக தென்மேற்கு பருவமழை சராசரியாக 700 மில்லி மீட்டரும், வடகிழக்கு பருவமழை சராசரியாக 300 மில்லி மீட்டரும், கோடை மழை 230 மில்லி மீட்டரும் பதிவாகும். ஆனால், வழக்கத்தை விட கடந்தாண்டு 124 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது. இந்நிலையில், அடுத்த மாதம் முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளது.

இது குறித்து கலெக்டர் அம்ரித் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில், மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய், உள்ளாட்சி, காவல், தீய ணைப்பு, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுப்பணி, மருத்துவம் மற்றும் சுகாதாரப்பணிகள் துறை, குடிமைப்பொருள் வழங்கல் உள்ளிட்ட துறை களைச் சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளன.

அனைத்து வட்டங்க ளிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள், 150 பேரிடர் கால நண்பர்களுக்கு பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்ட ணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

அதன்படி, உதகை கோட்டம் - 0423-2445577, குன்னூர் கோட்டம் - 0423-2206002, கூடலூர் கோட்டம் - 04262-261295, உதகை வட்டம் - 0423-2442433, குன்னூர் வட்டம் - 0423-2206102, கோத்தகிரி வட்டம் - 04266-271718, குந்தா வட்டம் - 0423-2508123, கூடலூர் வட்டம் - 04262-261252, பந்தலூர் வட்டம் - 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு பெறப்படும் தகவல்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது.தென்மே ற்கு பருவமழையை எதிர்கொ ள்ள அனைத்து முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் எந்தவித அச்சமும் அடைய வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News