உள்ளூர் செய்திகள்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி- கலெக்டர் திறந்து வைத்தார்

Published On 2022-09-11 09:24 GMT   |   Update On 2022-09-11 09:24 GMT
  • 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் கைவினை பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டு வருகிறது.

அதன்படி புன்னைந ல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.

அப்போது கலெக்டர் கூறியதாவது :-

தஞ்சாவூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள் தயாரிக்கும் பொருட்களுக்குசிறந்த ஒரு விற்பனை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரும் பொருட்டு தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் அங்காடி என்ற சிறப்பு அடையாளத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் அனைத்து மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு கூடுதல் விற்பனை வாய்ப்பும், கூடுதல் வருவாயும் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தரும் வகையில் ஒரு இலக்குடன் உருவாக்கப்படுகிறது.

ஏற்கனவே தஞ்சை மாநகராட்சியில் பூ மாலை வணிக வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினைப் பொருட்கள் மகளிர் சுய உதவி குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து.

கல்லணையிலும் விற்பனை அங்காடி தொடங்கப்பட்டன. இதன் மூலம் 35 மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் மூலம் 125 குழு உறுப்பினர்கள் நேரடியாகவும், மறைமுகமா கவும் வேலை வாய்ப்பினை பெற்று வருகின்றனர்.

தற்போது புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் தஞ்சை தாரகைகள் கைவினை பொருட்கள் மகளிர் சுயஉதவி க்குழு விற்பனை அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

இதில் தஞ்சை தலையாட்டி பொம்மைகள், பொய்க்கால் குதிரைகள், கால் மிதியடி, பொம்மை வகைகள், பைகள், மூங்கில் கூடைகள், பனைப்பொருட்கள், விளையாட்டு பொம்மைகள் உள்ளிட்டவை விற்பனை க்காக வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் இதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தாசில்தார் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், அறிவானந்தம், மகளிர் திட்ட உதவி அலுவலர் சிவா, ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா தனசேகர், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் அருளானந்த சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News