உள்ளூர் செய்திகள் (District)

கடைக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்ற கல்லூரி மாணவி மாயம்

Published On 2023-07-16 09:59 GMT   |   Update On 2023-07-16 09:59 GMT
  • அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.
  • ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள செக்குமேடு பகுதியை சேர்ந்தவர் மாணவி. இவர் நல்லானூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி மாலை 4 மணி அளவில் வீட்டிலிருந்து ஜெராக்ஸ் எடுக்க சென்று வருவதாக கூறிச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் பென்னாகரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன கல்லூரி மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News