உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட போது எடுத்தபடம்.

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2023-07-12 09:14 GMT   |   Update On 2023-07-12 09:14 GMT
  • செந்தூர்பாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அவரது மகன்கள் முன்னிலையில் நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் அ.தி.மு.க.நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கோட்டை:

செங்கோட்டையில் முன்னாள் அமைச்சர் செந்தூர்பாண்டியன் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி செங்கோட்டை அருகே கற்குடி கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி செந்தூர்பாண்டியன் மூத்த மகனும், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான செ.அய்யப்பராஜ், இளைமகன் கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா முன்னிலையில் நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.

Tags:    

Similar News