நில தகராறில் மோதல்:ராணுவ வீரர் உள்பட 8 பேர் மீது வழக்கு
- சம்பவத்தன்று சந்திரனின் கோழி பண்ணைக்கு கோழிகள் ஏற்ற லாரி வந்துள்ளது.
- அந்த லாரிக்கு சகாதேவன் தரப்பு வழிவிட் மறுத்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள பண்டுஹாரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 61). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சந்திரன்.
இவர்களிடையே நில தகராறு இருந்து வருகிறது. சம்பவத்தன்று சந்திரனின் கோழி பண்ணைக்கு கோழிகள் ஏற்ற லாரி வந்துள்ளது.
அந்த லாரிக்கு சகாதேவன் தரப்பு வழிவிட் மறுத்துள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பாலக்கோடு போலீசில் சகாதேவன் தரப்பில் கொடுத்துள்ள புகாரில் சந்திரன், குமார், கோவிந்தராஜ், முனிராஜ், சாந்தி ஆகியோர் தங்களை சாதி பெயரை சொல்லி விமர்சித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதேபோல எதிர் தரப்பில் சாந்தி என்பவர் கொடுத்த புகாரில் சகாதேவன், அவரது மகனான ராணுவ வீரர் சதீஷ்குமார் ஆகியோர் தன்னை மானபங்கப்படுத்தியதாக புகார் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு புகார்கள் குறித்தும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.