உள்ளூர் செய்திகள் (District)

விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு

Published On 2023-05-16 09:25 GMT   |   Update On 2023-05-16 09:25 GMT
  • நேற்று லட்சுமி சிலைக்கு முன்பாக வலம்புரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • கலச குடத்தில் இருந்த புனித நீரை விநாயகர் சிலை மீது ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் புதிதாக கட்டப்பட்ட போது, நகராட்சி அலுவலக வளாகத்தின் முன், லட்சுமி சிலை வைக்கப்பட்டு, நகராட்சி அலுவலர்கள் வழிபட்டு வந்தனர்.

இந்த நிலையில், நேற்று லட்சுமி சிலைக்கு முன்பாக வலம்புரி விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இதையொட்டி நகராட்சி ஆணையாளர் வசந்தி, பூஜை செய்யப்பட்ட கலச குடத்தை சுமந்து சாமி சிலையை வலம் வந்தார். பின்னர் கலச குடத்தில் இருந்த புனித நீரை விநாயகர் சிலை மீது ஊற்றி சிறப்பு பூஜை செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி இளநிலை உதவியாளர்கள் அறிவழகன், செந்தில்குமார், நகரமைப்பு அலுவலர் செந்தில்குமார் செழியன், மின் பணியாளர் வெங்கடேசன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இது குறித்து நகராட்சி ஆணையாளர் வசந்தி கூறுகையில், இங்கு லட்சுமி சிலை மட்டும் இங்கு இருந்தது. இங்கு பல பிரச்சினைகள் நடந்துள்ளது. ஆகவே பிரச்சினைகள் நீங்கி, அனைத்தும் சுமூகமாக நடக்கவும், குழப்பங்கள் நீங்கி அனைவரும் நன்றாக இருக்கவும், பணிகள் அனைத்தும் சிறப்பாக நடைபெற வேண்டியும் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Tags:    

Similar News