உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் கட்டிட தொழிலாளி தற்கொலை

Published On 2023-04-10 09:08 GMT   |   Update On 2023-04-10 09:08 GMT
  • காதல் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தால் விபரீத முடிவை எடுத்தார்.
  • துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை:

கோவை துடியலூர் அருகே உள்ள இடையர்பா ளையம் காந்தி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் செல்லபாண்டி (வயது 27). கட்டிட தொழிலாளி.

இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போன் மூலமாக பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

சம்பவத்தன்று செல்ல பாண்டி தனது பெற்றோ ரிடம் தான் காதலிக்கும் இளம்பெண்ணை திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். ஆனால் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க மறுத்து விட்டனர்.

இதனால் மனவேதனை அடைந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து அந்த பகுதியில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சிய டைந்தனர். பின்னர் இது குறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட செல்லபாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News