உள்ளூர் செய்திகள்

இலங்கை கடற்படையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்- விஜய் வசந்த் எம்.பி. பங்கேற்பு

Published On 2024-07-19 10:51 GMT   |   Update On 2024-07-19 11:30 GMT
  • ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
  • மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

இலங்கை கைவசம் உள்ள நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகளை உடனடியாக மீட்டுத்தரக் கோரியும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும், சேதமடைந்த படகுகளுக்கு தமிழக அரசு வழங்குவதுபோல், மத்திய அரசும் தகுந்த இழப்பீடு வழங்கக் கோரியும், மீண்டும் மீண்டும் மீனவர்கள் மீன்பிடிக்கும்போது கைது செய்யப்படுவதையும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவது, பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளை கண்டித்தும், நமது மீனவர்கள் மீதான நீதிமன்ற தண்டனையை நிறுத்தக் கோரியும், இந்திய மீனவர்களிடம் அத்துமீறும் இலங்கை கடற்படையினரை கண்டித்தும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இராமேஸ்வரத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.


முன்னதாக ஆரல்வாய்மொழி பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டிகளை தொடங்கி வைத்தேன்.

ஏற்றக்கோடு ஊராட்சி மன்ற உறுப்பினர் தெரசம்மாள் உட்பட மாற்று கட்சியினர் 20 பேர் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் திருவட்டார் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜெபா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்தினகுமார் மற்றும் வட்டார மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மண்டைக்காடு புதூர் புனித லூசியா ஆலயம் திருத்தலமாக உயர்த்தப்பட்டு முதல் திருப்பலி நடைபெற்றது.


 கோட்டார் ஆயர் நசரேன் சூசை அவர்கள் நடத்திய இந்த திருப்பலியில் நானும் கலந்து கொண்டு இறை ஆசி பெற்றேன்

Tags:    

Similar News