உள்ளூர் செய்திகள் (District)

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிலுவையில் உள்ள அகவிலைப்படி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-07-22 09:16 GMT   |   Update On 2022-07-22 09:16 GMT
  • இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.
  • நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரக்கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு வட்டாரதலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.வட்டாரச் செயலாளர் இளங்கோவன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார். துணைசெ யலாளர்கள் ராஜரத்தினம் ,சக்திதா சன், செயற்குழு உறுப்பி னர் அய்யாதுரை, துணை த்தலைவர் விஜயகுமார், மாவட்ட பொருளாளர் எழில்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்,நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்க வேண்டும்என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. முடிவில் வட்ட பொரு ளாளர் ஜெயம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News