உள்ளூர் செய்திகள்
அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
- அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும்.
- ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு கிளை தலைவர் சுகுமாரன் தலைமை தாங்கினார். செயலாளர் பெரியநாயகி, பொருளாளர் கீதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், இணை பேராசிரியர், பேராசிரியர் பணி மேம்பாட்டுத் தொகை தொடர்பான அரசாணையை முழுவதுமாக அமல்படுத்த வேண்டும்.
எம்.பில்., பி.எச்.டி., ஊக்க ஊதிய உயர்வினை உடனடியாக வழங்க வேண்டும். அரசு கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.