உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

சூறாவளி காற்றுக்கு மேற்கூரை பறந்து விழுந்ததில் மாற்றுத்திறனாளி சாவு

Published On 2022-09-13 07:14 GMT   |   Update On 2022-09-13 07:14 GMT
  • தாழ்வா ரத்தில் போடப்பட்டு இருந்த இரும்பு தகரம் காற்றின் வேகத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு முருகன் தலை மீது வெட்டியது.
  • மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்மைபத் ்தொழுகிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 56). மாற்றுத்திறனாளி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்புள்ள திண்ணையில் அமர்ந்து உறவினருடன் பேசிக் கொண்டு இருந்தார்.

அப்போது காற்று பலமாக வீசியது. கணேசன் என்பவரது வீட்டு தாழ்வா ரத்தில் போடப்பட்டு இருந்த இரும்பு தகரம் காற்றின் வேகத்துக்கு அடித்துச் செல்லப்பட்டு முருகன் தலை மீது வெட்டியது.

இதில் பலத்த காய மடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News