உள்ளூர் செய்திகள் (District)

பெண்ணிடம் தகராறு- 2 பேர் மீது வழக்கு

Published On 2023-03-24 10:17 GMT   |   Update On 2023-03-24 10:17 GMT
  • ஆசை வார்த்தை கூறி சுதாவிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.
  • இதனை யடுத்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அவ்வை நகர் பகுதியை சேர்ந்தவர் சுதா (வயது29). இவர் திருமணம் ஆன நிலையில் முதல் கணவரை பிரிந்து கம்பைநல்லூர் அருகே பானிப்பூரி கடை நடத்தி வந்தார்.

இந்நிலையில் சுதாவுக்கு கோனம்பட்டி பகுதியை சேர்ந்த மாதேஷ் (வயது33) உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமண ஆசை வார்த்தை கூறி சுதாவிடம் இருந்து ரூ.5 லட்சம் வாங்கி கொண்டு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்.

இதனையடுத்து கம்பைநல்லூரில் உள்ள கோவிந்தன் என்பவரின் வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இதனை யடுத்து இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சுதா கொடுத்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீசார் மாதேஷ், உதவியாக இருந்த கோவிந்தன் ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News