உள்ளூர் செய்திகள் (District)

பறிமுதல் செய்யப்பட்ட நகையை படத்தில் காணலாம்.

பெண்ணின் கவனத்தை திசை திருப்பி தாலி செயினை பறித்த 2 பேர் கைது

Published On 2023-04-25 10:35 GMT   |   Update On 2023-04-25 10:35 GMT
  • கடந்த 17-ந்தேதி அவரது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டனர்.
  • இவர்கள்தான் வனிதாவின் தாலி செயினை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சத்யநாராயணா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் வனிதா. இவர் தனது வீட்டில் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி அவரது கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள் தண்ணீர் பாட்டில் கேட்டனர்.

தண்ணீர் பாட்டிலை எடுக்க வனிதா திரும்பிய போது, அந்த நபர்கள் திடீரென வனிதாவை கீழே தள்ளி, அவர் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தாலி செயினை பறித்து க்கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதில் அதிர்ச்சியடைந்த வனிதா, இது குறித்து ஓசூர்அட்கோ போலீசில் புகார் செய்தார்.

புகாரை பதிவு செய்த போலீசார், குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர். இந் நிலையில், நேற்று மாலை, ஓசூர்- நல்லூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் போது அந்த வழியாக ஒருமோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும் வகையில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம் சந்தாபுரா அருகேயுள்ள பன்னஹள்ளியை சேர்ந்த ஸ்ரீதர் (31) மற்றும் தும்கூரு அருகே கொரட்டஹள்ளியை சேர்ந்த சிவகுமார்(31) என்பதும், இவர்கள்தான் வனிதாவின் தாலி செயினை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து, தாலி செயினையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News