உள்ளூர் செய்திகள் (District)

தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்த்தல் முகாம்,மொக்தியார் மஸ்தான் தொடங்கிவைத்தார்.

அவலூர்பேட்டையில் தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்த்தல் முகாம்: மொக்தியார் மஸ்தான் தொடங்கிவைத்தார்

Published On 2023-04-11 08:11 GMT   |   Update On 2023-04-11 08:11 GMT
  • அவலூர்பேட்டை ஊராட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார்.

விழுப்புரம்:

விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் அவலூர்பேட்டை ஊராட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம், நீர், மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நடராஜன் வரவேற்றார். ஒன்றிய கவுன்சிலர் ஷாகின் அர்ஷத், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரோஜா அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் கலந்து கொண்டு தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கைளை ஒன்றிய நிர்வாகிகளிடம் வழங்கினர். இதையடுத்து நீர், மோர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு மோர், தர்பூசணி பழங்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

Tags:    

Similar News