உள்ளூர் செய்திகள் (District)
தி.மு.க. கட்சி கொடியை சேதப்படுத்தியவர் மீது வழக்கு
- முக்கல் நாயக்கன்பட்டியில் உள்ள திருப்பதி கொட்டாய் பிரிவில் சாலையின் அருகே தி.மு.க கட்சி கொடியை பிடுங்கி எரிந்ததாக கூறப்ப டுகிறது.
- தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பனை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை அருகே உள்ள பூர்சன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது38). இவர் முக்கல் நாயக்கன்பட்டியில் உள்ள திருப்பதி கொட்டாய் பிரிவில் சாலையின் அருகே தி.மு.க கட்சி கொடியை பிடுங்கி எரிந்ததாக கூறப்ப டுகிறது.
மேலும் இதனை தட்டி கேட்ட ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பனை தகாத வார்த்தையில் பேசியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மூக்கல் நாயக்கன்பட்டி தி.மு.க கிளை செயலாளர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் அதியமான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.