உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாணவிக்கு பரிசு வழங்கினார்.

போதை பொருள் விழிப்புணர்வு முகாம்

Published On 2023-05-18 10:05 GMT   |   Update On 2023-05-18 10:05 GMT
  • கள்ளச்சாராயம், போதை பொருள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு.
  • பொதுமக்களிடம் மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் கள்ளச்சாராயம் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மதுவிலக்கு அமலாக்க பிரிவு மற்றும் கொள்ளிடம் காவல்நிலையம் சார்பாக நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு பொதுமக்களிடையே மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் போதை பொருள் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்தார்.

குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுங்கள் அதைவிட பெரிய போதை ஏதும் இல்லை என அறிவுரை வழங்கினார்.

மேலும் கள்ளச்சார விற்பனை நடைபெற்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவரின் விவரம் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் சீர்காழி காவல்துறை கண்காணிப்பாளர் லாமேக், சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் காவல்துறை, மதுவிலக்கு அமலாக்க துறை அதிகாரிகள் திரளான கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News