குடிபோதையில் தகராறு: நண்பரை கல்லால் தாக்கிய வாலிபர் கைது
- குடி–போதையில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.
- ஆத்திரமடைந்த ராஜகோபால் திடீரென்று அருகில் இருந்து கல்லை எடுத்து ஸ்ரீகாந்தை சரமாரியாக தாக்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சிகரமனபள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (வயது24). கூலித்தொழிலாளி. அதேபகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (22). இருவரும் நண்பர்கள்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருவதால் நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகாந்த், ராஜகோபால் இருவரும் இணைந்து மது குடித்தனர்.
அப்போது குடி–போதையில் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால் திடீரென்று அருகில் இருந்து கல்லை எடுத்து ஸ்ரீகாந்தை சரமாரியாக தாக்கினார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிர அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் வேப்பனபள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.