கடன் தொல்லையால் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
- கடந்த 7 வருடத்துக்கு முன்பு தனது சொத்துக்களை விற்றுவிட்டு உத்தனப்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே மாதுராஜ் வசித்து வந்தார்.
- கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகேயுள்ள தொட்டத்திம்மலஹள்ளி ஊராட்சி எடவள்ளியை சேர்ந்தவர் மாதுராஜ் (வயது 55). இவரது மனைவி சாரதா . இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த 7 வருடத்துக்கு முன்பு தனது சொத்துக்களை விற்றுவிட்டு உத்தனப்பள்ளியில் உள்ள தனது மாமியார் வீட்டிலேயே மாதுராஜ் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதனால் மாதுராஜ் திடீரென ஊரைவிட்டு வெளியேறி மாயமாகிவிட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த சூழலில் உத்தனபுள்ளி-சூளகிரி ரோட்டில் உள்ள ஒரு அட்டைப்பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தின் பின்புறம் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மாதுராஜ் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.
இது குறித்த புகாரின்பேரில் உத்தனபுள்ளி போலீசார் வழக்கு பதிந்து மாத்துராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மாதுராஜின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.