தோல் நோய்க்கு எட்டி விதை சாப்பிட்ட முதியவர் சாவு
- 3 ஆண்டுகளாக கை மற்றும் கால்களில் தோல் நோய் இருந்து வந்துள்ளது.
- கடந்த 20 ஆம் தேதி இரவு வாந்தி எடுத்ததள்ளார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, அடுத்த ஏஜெட்டிஅள்ளி பஞ்சாயத்திற்கு உட்பட்ட வெத்தலைகாரன் பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வையாபுரி (70) இவர் தன் மகன் ஆனந்தன் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் முதியவருக்கு 3 ஆண்டுகளாக கை மற்றும் கால்களில் தோல் நோய் இருந்து வந்துள்ளது. இதனை குணமாகுவதற்கு மருந்தாக எட்டிக் கொட்டையை தினந்தோறும் சிறிது சிறிதாக சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி இரவு வாந்தி எடுத்ததள்ளார்.
இதனை கண்ட மகன் ஆனந்தன் என்ன என்று கேட்டபோது இன்று எட்டிக் கொட்டையை அதிகமாக சாப்பிட்டு விட்டேன் என கூறியுள்ளார். இதனையடுத்து முதியவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து ள்ளனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இது குறித்து அதிய மான் கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.