உள்ளூர் செய்திகள் (District)

கிரிக்கெட் வீரர்களுக்கு சி.த.செல்லப்பாண்டியன் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கிய காட்சி.

அ.தி.மு.க. சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள்- சி.த.செல்லப்பாண்டியன் வழங்கினார்

Published On 2023-01-03 08:59 GMT   |   Update On 2023-01-03 08:59 GMT
  • விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி வருகின்றனர்.
  • ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார்.

தூத்துக்குடி:

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் அ.தி.மு.க.வினர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்களை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை பகுதி அவைத் தலைவர் குமார் செய்திருந்தார்.

Tags:    

Similar News