உள்ளூர் செய்திகள் (District)

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கிய காட்சி.

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்கள்

Published On 2022-06-12 09:15 GMT   |   Update On 2022-06-12 09:15 GMT
  • 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் 102 மாற்றுத்திறானாளிகளுக்கு ரூ.12.71 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் உதவித்தொகைக்கான ஆணைகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவினை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.

மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கான யு.டி.ஐ. அடையாள அட்டை சுமார் 50 பேருக்கு வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-

மாற்றுத் திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கக்கூடிய யு.டி.ஐ. அடையாள அட்டை என்பது ஆதார் அட்டை போன்றது. முதல்-அமைச்சர் அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளி களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2000-ஆக உயர்த்தி வழங்கப்படும். தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுப்படி தகுதியுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம் திட்ட அலுவலர் வீரபுத்திரன், மாவட்ட தொழில் மையம் மேலாளர் சொர்ணலதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், வ.உ.சி. கல்லூரி முதல்வர் வீரபாகு மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News