உள்ளூர் செய்திகள் (District)
- ஈரோடு பகுதியில் 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
- ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க ஆண்டு பொது மகா சபை கூட்டம் வரும் 5-ந் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு:
ஈரோடு பகுதியில் பெருந்துறை, ஈரோடு ஒழுங்கு முறை விற்பனை கூடம் மற்றும் ஈரோடு, கோபி சொசைட்டி என 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க ஆண்டு பொது மகா சபை கூட்டம் வரும் 5-ந் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அன்றைய தினம் மஞ்சள் ஏலம் நடைபெறாது. 6-ந் தேதி வழக்கப்போல ஏலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.