உள்ளூர் செய்திகள் (District)
- மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ.க .அலுவலகத்தை மொடக்குறிச்சி சரஸ்வதி எம். எல். ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
- தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மொடக்குறிச்சி:
மொடக்குறிச்சி வடக்கு ஒன்றிய பா.ஜ.க .அலுவலகத்தை மொடக்குறிச்சி சரஸ்வதி எம். எல். ஏ. கலந்துகொண்டு திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார்.
முன்னதாக வடக்கு ஒன்றிய தலைவர் ரெயின்போ கணபதி வரவேற்றார்.
மாநில பொதுச்செ–யலாளர் ஏ. பி .முருகா–னந்தம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து பல்வேறு கட்சியில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பா.ஜ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.
தெற்கு மாவட்ட செயலாளர் பாயிண்ட் மணி,தெற்கு மாவட்ட தலைவர் எஸ். டி செந்தில்குமார்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.எஸ். சவுந்தரம், பொதுச் செயலாளர்கள் சிவகாமி, செந்தில், மகேஸ்வரன், ஈஸ்வரமூர்த்தி, வேதானந்தம், மாவட்ட பொருளாளர் சுதர்சனம்,–மற்றும் ஒன்றிய மாவட்ட பிரதிநிதிகள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.