- சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கருங்கவுண்டன்வலசில் மின்னொளியில் உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடந்தது.
- போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகை வழங்கப்பட்டது.
சென்னிமலை:
சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கருங்கவுண்டன்வலசில் மின்னொளியில் உதயம் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக மாபெரும் கபடி போட்டி நடந்தது.
இதில் மாவட்டத்தின் தலை சிறந்த ௫௦-க்கு மேற்பட்ட கபடி அணிகள் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் நாக்–அவுட் முறையில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ. 5,000 மற்றும் வெற்றி கோப்பையினை ஈரோடு லட்சுணமண் பிரதர்ஸ் அணி வென்றது.
2-வது இடத்தினை அரச்சலூர் நாகராஜ் ஏ அணியிரும், மூன்றாம் பரிசினை கோட்டாம்பாளையம், கோல்டன் பாய்ஸ் அணியும், நான்காம் பரிசினை வெள்ளோடு, மனமகிழ் மன்ற அணியின ரும் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பை மற்றும் பரிசு தொகையினை சென்னிமலை கிழக்கு ஒன்றிய தி.மு.க., பொறுப்பாளர் சி.பிரபு வழங்கினார்.
இதில், தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள், இளைஞர் அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.