உள்ளூர் செய்திகள் (District)
- விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
- இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், மேட்டுப்புதூர் பகுதியில் தொழிலாளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ஒரு மகள் உள்ளார்.
அவர் விஜயமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை.
உடனடியாக அந்த தொழிலாளி அக்கம் பக்கத்தார் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.