உள்ளூர் செய்திகள்

பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை

Published On 2023-01-13 09:31 GMT   |   Update On 2023-01-13 09:31 GMT
  • ஈரோடு பகுதியில் 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது.
  • பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி கூட்டுறவு சங்கம் என 4 இடங்களில் மஞ்சள் ஏல முறை விற்பனை நடக்கிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி 4 நாட்களுக்கு மஞ்சள் மார்க்கெட் விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வருகின்ற 14-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், 18-ந் தேதி வழக்கம் போல மார்க்கெட் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News