உள்ளூர் செய்திகள்

தொழிலாளியை மிரட்டி பணம்-நகை பறிப்பு; வாலிபர் கைது

Published On 2023-06-05 09:54 GMT   |   Update On 2023-06-05 09:54 GMT
  • மோதிரம், செல்போன், பணத்தை கொடுத்து விடுங்கள். இல்லையென்றால் கொலை செய்து விடுவேன்.
  • போலீசார் பல்வேறு இடங்களில் தேடி மறைந்திருந்த கிறிஸ்துவராஜை பிடித்து கைது செய்தனர்.

தஞ்சாவூர்:

புதுக்கோட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 40 ). இவர் ஊர் ஊராக சென்று ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தஞ்சை பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஒரு விளை நிலத்தில் ஆடு கிடை போட்டார்.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிளில் ஆடுகளை பார்ப்பதற்காக புறப்பட்டார்.

பள்ளி அக்ரஹாரம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளை ஒரு வாலிபர் வழிமறித்து நிறுத்தினார். திடீரென அந்த வாலிபர் உங்கள் மோதிரம் ,செல்போன் பணத்தை கொடுத்து விடுங்கள்.

இல்லையென்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதனால் உயிருக்கு பயந்து ரவிக்குமார், தான் அணிந்திருந்த பணம் ,செல்போன் மற்றும் ரூ.5000 ரொக்கம் ஆகியவற்றை அந்த வாலிபரிடம் கொடுத்தார்.

இதையடுத்து வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.தொடர்ந்து இது பற்றி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் ரவிக்குமார் புகார் செய்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா மேற்பார்வையில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெ க்டர்கள் பழனியாண்டி ,குருசாமி, செந்தில், தலைமை காவலர் அப்துல்லா ஆகியோர் அடங்கிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் தொழிலாளியை மிரட்டி பணம், மோதிரத்தை பறித்தவர் பள்ளியக்ரஹா ரத்தை சேர்ந்த கிறிஸ்துவராஜ் (22) என்பது தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் பல்வேறு இடங்களில் தேடி மறைந்திருந்த கிறிஸ்துவராஜை பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News