உள்ளூர் செய்திகள் (District)

உளுந்தூர்பேட்டை அருகே விவசாயி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2023-10-18 08:31 GMT   |   Update On 2023-10-18 08:31 GMT
  • மனநலம் குன்றிய மகனை வைத்துக் கொண்டு, விவசாயம் பார்க்க முடியாமல் முத்து அவதியுற்று வந்துள்ளார்.
  • சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

கள்ளக்குறிச்சி:

உளுந்தூர்பேட்டை அடுத்த அங்கனூரை சேர்ந்தவர் முத்து (வயது 65). ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர். இவர் அதே ஊரில் விவசாயம் செய்து வந்தார். இவரது பணி சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்து போனார். இதையடுத்து மனநலம் குன்றிய மகனை வைத்துக் கொண்டு, விவசாயம் பார்க்க முடியாமல் முத்து அவதியுற்று வந்துள்ளார். இதனால் மனமுடைந்து அவர், விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் குணபாலன், சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News