உள்ளூர் செய்திகள் (District)

மேச்சேரி அருகே பஸ் மோதி விவசாயி பலி

Published On 2022-10-31 09:31 GMT   |   Update On 2022-10-31 09:31 GMT
  • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
  • அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது மோதியது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேட்டூர்:

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரி அருகே உள்ள கோல்காரன் திட்டு பகுதியை சேர்ந்தவர் அய்யண்ணன் (வயது 66). விவசாயியான இவர், இன்று காலை இருசக்கர வாகனத்தில் மேச்சேரி மெயின் ரோட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி சென்ற அரசு பஸ், எதிர்பாராத விதமாக அய்யண்ணன் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அய்யண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News