உள்ளூர் செய்திகள்

தருமபுரி அருகே விவசாயி கொலை:2 பேர் சிறையில் அடைப்பு

Published On 2022-12-18 09:31 GMT   |   Update On 2022-12-18 09:31 GMT
  • வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
  • மாதையன், முருகனை 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தருமபுரி,

தருமபுரி அருகே உள்ள புலிகரை பகுதியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (வயது 55). இவருடைய மனைவி கந்தம்மாள்.

இவர்களுக்கு பிரேம்கு மார் (30), ரஞ்சித்குமார் (28) என்ற 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

இந்நிலையில் கடந்த 12-ந் தேதி புலிகரை அருகே உள்ள தோட்டத்தில் கிருஷ்ணன் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடும்பத்தை சரியாக கவனிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் கிருஷ்ணனின் 2 மகன்களே அவரை உறவினர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக்கொலை செய்தி ருப்பது தெரியவந்தது.

இதையடுத்து கிருஷ்ணனின் மகன்களான பிரேம்குமார், ரஞ்சித்குமாரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவத்தில் தொட ர்புடைய கிருஷ்ணனின் உறவினர்களான மாதையன் (42), முருகன் (40) ஆகிய 2 பேர் தலைமறைவாக இருந்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் தருமபுரி அருகே பதுங்கி இருந்த அவர்கள் 2 பேரும் போலீசாரிடம் சிக்கினர். இந்த கொலை சம்பவம் குறித்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி மாதையன், முருகனை 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News