உள்ளூர் செய்திகள் (District)

தக்காளி தோட்டம் நாசம் செய்து யானைகள் அட்டகாசம்

Published On 2024-10-26 06:41 GMT   |   Update On 2024-10-26 06:41 GMT
  • உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
  • தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 10 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன.

இந்நிலையில் சந்தனப்பள்ளி, தல்சூர் ஆகிய கிராமங்களில் 2 யானைகள் முகாமிட்டு ராகி பயிர்களை நாசம் செய்துள்ளன. விவசாயிகள் பட்டாசு வெடித்து விரட்டியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து அருகில் உள்ள குருபட்டி கிராமத்தில் மூர்த்தி என்பருடைய 3 ஏக்கர் தக்காளி தோட்டத்தில் 2 யானைகள் புகுந்து தோட்டத்தை காலல் மிதித்து நாசம் செய்துள்ளன.

இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் சேதமடைந்த தாக்காளி, ராகி தோட்டங்களை பார்வையிட்டனர். தக்காளி விலை சற்று உயர்ந்துள்ள நிலையில் யானைகள் அட்டகாசத்தால் தக்காளி தோட்டம் நாசமடைந்து உள்ளதால் விவசாயி மூர்த்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வனத்துறையினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், இந்த பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News