வாலிபரிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்ற தந்தை - மகன் கைது
- 2 பேர் தினேசை கத்தி முனையில்மி ரட்டி பணம் பறிக்க முயன்றனர்.
- விஜயகுமார், மணிமாறனை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி லண்டன்பேட்டையை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 23). இவர் கடந்த 1-ந் தேதி இரவு பழையபேட்டை கோட்டை பகுதியில் நடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் தினேசை கத்தி முனையில்மி ரட்டி பணம் பறிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பித்த தினேஷ்குமார் இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றது கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையை சேர்ந்த மார்கோ என்கிற விஜயகுமார் (வயது 61), அவரது மகன் குல்பி என்கிற மணிமாறன் (25) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான மார்கோ, அவரது மகன் குல்பி ஆகிய 2 பேரும் ரவுடிகள் ஆவார்கள். மார்கோ மீது கிருஷ்ணகிரி டவுன் போலீசில் 2 கொலை வழக்குகள் நிலுவையில்உ ள்ளன. அதே போல குல்பி மீது 2 கொலை வழக்குகள், 3 அடிதடி வழக்குகள்நி லுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.