சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கவிழா
- முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
- நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார்கள்.
வள்ளியூர்:
சமூகரெங்கபுரத்தில் இயங்கிவரும் டி.டி.என் கல்வி குழுமத்தின்ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடக்கவிழா நடை பெற்றது.
இதில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவர்களது பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வள்ளியூர் பங்குதந்தை ஜான்சன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மேலும் கல்லூரியின் சேர்மன் லாரன்ஸ், கல்லூரியின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ் கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வரவேற்றார்கள்.
நிகழ்ச்சியில் முன்னதாக பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர்.சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
2021-22-ம் கல்வி ஆண்டில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வுகளையும் மாணவர்களின் சாதனைகளையும் மெக் கானிக்கல் துறைத்தலைவர் ராம்கி எடுத்துரைத்தார்.
முதலாம் ஆண்டு துறைத் தலைவர் ஜான் ஜெபஸ் வரவேற்று பேசினார். கல்லூரியின் துணை முதல்வர் விமலா நன்றி தெரிவித்தார்கள்.
விழாவிற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.