உள்ளூர் செய்திகள் (District)

முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கலைஞர் பிறந்த இல்லத்தில் முன்னாள் அமைச்சர் முரசொலி மாறன் நினைவு நாள் அனுசரிப்பு

Published On 2022-11-24 09:30 GMT   |   Update On 2022-11-24 09:30 GMT
  • இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர்.
  • தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் பிறந்த இல்லத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான முரசொலி மாறன், முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்றும், மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி, பன்னாட்டு வணிக விலை பேரங்களில் இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பல பாராட்டுக்கள் பெற்றவர் என்றும் அவரின் சாதனைகள் குறித்து இரங்கள் நிகழ்வில் பேசப்பட்டது.

Tags:    

Similar News