உள்ளூர் செய்திகள் (District)

விவசாயிகளுக்கு செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் அருகே தென்னையில் வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி

Published On 2022-08-28 04:45 GMT   |   Update On 2022-08-28 04:45 GMT
  • தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறைபற்றி விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
  • இந்த செயல் விளக்க நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் வட்டாரம், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரமோகன் தென்னையில் ரூக்கோஸ் என்ற வெள்ளை ஈ கட்டுப்படுத்தும் முறையினை விவசாயிகளுக்கு எடுத்து கூறி அதனை செயல் விளக்கமாக செய்து காண்பிக்க அறிவுறுத்தினார்.

அதன்படி ரூக்கோஸ் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறையினை கொத்தப்புள்ளி, காமாட்சிபுரம், முருநெல்லிக்கோட்டை, கரிசல்பட்டி, குட்டத்துப்பட்டி, சில்வார்பட்டி ஆகிய பகுதி விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது .

இந்த செயல் விளக்க நிகழ்வில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பால்ராஜ், முத்துச்சாமி, சந்திரகலா, வெள்ளை சாமி, ராஜி மற்றும் அட்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பொன் தமிழரசு ,அருண்குமார் ஆகியோர் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.

Tags:    

Similar News