உள்ளூர் செய்திகள் (District)

அ.தி.மு.க நிர்வாகி திருமண விழாவில் 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

Published On 2023-11-21 09:51 GMT   |   Update On 2023-11-21 09:51 GMT
  • எடப்பாடி பழனிசாமி சீர்வரிசை பொருட்களை வழங்கினார்
  • சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என கூறினார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல் இல்ல திருமண விழா தருமபுரியில் நடைபெற்றது. திருமண விழாவில் எஸ்.ஆர்.வெற்றிவேல் அனை வரையும் வரவேற்றார். விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு டாக்டர் ரேணுகாதேவி, டாக்டர் ஜே.டி. ஆலன் திலக் ஆகியோருக்கு திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து 100 ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினார்.

இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செய லாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்.ஜி.ஆர்.,ஜெயல லிதாவின் அருள் ஆசியுடன் இந்த திருமண விழா நடைபெற்றுள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. அரங்க நாதன் எம்.ஜி.ஆரின் அன்பை பெற்றவர். தருமபுரியில் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பொறுப்புகளை வகித்தவர். அவருடைய மகன் எஸ்.ஆர். வெற்றி வேல் அ.தி.மு.க.வில் பல ஆண்டுகளாக கட்சிப் பணியாற்றி வருபவர். தருமபுரி நகர செயலாளர், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு களை வகித்தவர்.

தனது மகளின் திரும ணத்தோடு 100 ஜோடி களுக்கு திரும ணத்தை அவர் நடத்தி இருப்பது பாராட்டு க்குரியது. இந்த திருமண ஜோடிகள் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். மணமகனின் தந்தை ஆர்.ஜே.கே.திலக் எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வருபவர். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தமிழகத்தில் எப்போது எந்த தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. தான் வெற்றி பெறும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Similar News